குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று பதவிவிலகப்போவதில்லை!! ஜனாதிபதி!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை பொறுப்பேற்று ஒருபோதும் தாம் பதவிவிலகப்போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கி நேர்காணலிலேயே மைத்திரிபால சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“தாக்குதலை தடுக்க முடியாமல் போனமையையிட்டு மிகவும் கவலையடைகின்றேன். ஆனாலும் குறித்த சம்பவங்களுக்கு காரணமானவர்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகின்றோம்.

மேலும் இத்தகைய சம்பவங்கள் வேறு நாடுகளில் இடம்பெற்றபோது அந்நாட்டு தலைவர்கள் எவரும் அதற்கு பொறுப்பேற்று பதவிவிலகியதில்லை.

ஆகையால் நானும், இந்த தாக்குதல் சம்பவங்களை பொறுப்பேற்று பதவிவிலக போவதில்லை” என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.