பொறுப்பேற்க ஆளின்றி சஹ்ரானின் மகள்!!

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹசீமின் மனைவி மற்றும் மகள் குற்ற விசாரணை திணைக்கள பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

தற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்த சஹ்ரானின் மகளை எவரும் பொறுப்பேற்க முன்வரவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.


இதன் காரணமாக 4 வயதான மகள் தாயுடன் குற்ற புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் 26ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் 15 பேர் உயிரிழந்தனர்.

எனினும் இதிலிருந்து தப்பித்த பயங்கரவாதி சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது உடல்நிலை தேறியுள்ள நிலையில், கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டு அவரிடம் பலகோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.