கஞ்சி வார்த்த கடவுள்!! கவிதை!!📷

உயிர்களை குடித்துக் கொண்டிருந்த
எறிகணைகளுக்கு மத்தியில்
 நின்றுகொண்டு தான் நாம்
கஞ்சி குடித்துக் கொண்டு இருந்தோம்
வாழும் நப்பாசையில்


எமக்கு
உயிரை விடவும் அன்றுஸ
 பெறுமதியாய் இருந்தது         
இந்த கஞ்சி தான்

ஏன் தெரியுமா?

அன்று  எம்
ஒவ்வொருவர்உயிரும் இருந்ததே
இந்தக் கஞ்சியை நம்பித்தான்

கஞ்சி
உங்கள் பலருக்கு ஆகாரமாய் இருக்கலாம்

ஆனால் எமக்கோ
ஒருநாள் உயிர் இருப்பிற்கான ஆதாரமே அதுதான்

கஞ்சி
குடிக்கப் போய் செத்தவனும் உண்டு

கஞ்சி
குடித்து உயிர் பிழைத்தவனும் உண்டு

அதனால் தான் கஞ்சி வார்த்தவன்
கடவுளாகிறான்
பலரையும் காத்ததனால்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.