அதிஉச்ச பாதுகாப்பில் நல்லூர் ஆலய வளாகம்!!📷

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தைச் சுற்றி பெருமளவிலான இராணுவம், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.


யாழ். நல்லூர் ஆலயத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக கூறி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு ஆலய வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது பரபரப்பான நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் ஆலய சூழுலுக்குள் அனுமதிக்கப்படாததுடன் பக்தர்கள் உடற் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

நேற்றைய தினம் கிடைக்கப்பெற்ற அக் கடிதத்தில் எனது கணவரும், வேறு சிலரும் இணைந்து நல்லூர் ஆலயத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

குறித்த அநாமதேய கடிதம் தொடர்பில் ஆளுநர் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து குறித்த பாதுகாப்பு கெடுபிடிகள் நல்லூர் ஆலய வளாகத்திலும், அதனை சூழவுள்ள பகுதிகளிலும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக் கடிதம் தொடர்பிலும் பொலிசார் தீவிர விசாரனையில் ஈடுபட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.