அரச இணையத்தளங்கள் தீவிர பாதுகாப்பில் !

இலங்கையில் இடம்பெற்ற சைபர் தாக்குதலை அடுத்து அரச இணையத்தளங்களுக்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


தற்போது வரையில் பாதுகாப்பு உறுதி செய்ய்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவின் பாதுகாப்பு பொறியிலாளர் மிகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.

குறித்த சைபர் தாக்குதலின் பின்னர் அரசாங்க இணையத்தளம் அல்லது gov.lk என்ற இணையத்தளங்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச இணையத்தளங்கள் டெலிகொம் நிறுவனத்தின் சேவர்களில் இணையக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் அனைத்து இணையத்தளங்களும் தற்போது கண்கானிக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் தாக்குதலுக்குள்ளான இணையத்தளங்கள் தற்போது வழைமைக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறியளவான இணையத்தளங்கள் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் மிகஸ்முல்ல குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.