ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலர் நாடாளுமன்றத்திற்குள்!!

தேசிய தௌஹீத் ஜமாத் தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்குள் ஊடுறுவியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


கடந்த சனிக்கிழமை, நாடாளுமன்ற ஹன்சார்ட் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றி வந்த தௌஹீத் ஜமாத் அமைப்பின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து நாடாளுமன்றில் பணியாற்றி வரும் மேலும் சில தீவிரவாதிகள் தொடர்பிலும் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகரின் பூரண ஒத்துழைப்புடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தௌஹீத் ஜமாத் உறுப்பினர்கள் நாடாளுமன்றில் பணியாற்றுவது நாடாளுமன்றின் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களை கைது செய்யும் இரகசிய திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.