வவுனியாவில் மௌன அஞ்சலியுடன் பிரார்த்தனை!!

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒரு மாதமாகின்ற நிலையில், அதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


அந்தவகையில் தாக்குதல்களில் உயிர்நீத்த மக்களின் ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனை நிகழ்வு வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் குறித்த பிரார்த்தனை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை பொதுஜன போக்குவரத்து சங்கத் தலைவரின் தலைமையில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்வின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர்களின் ஆத்ம சாந்திக்காக மெழுகுவர்த்தியும் ஏற்றி வைக்கப்பட்டது.

இந்த ஆத்ம சாந்தி பிரார்த்தனை, இலங்கை பொதுஜன போக்குவரத்து ஊழியர் சங்க வவுனியா சாலையினர், இலங்கை தேசிய ஆணைக்குழு, தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் இ.போ.ச சாலை ஊழியர்கள் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.