ஜுன் – 3’ அரச மொழி தினமாக பிரகடனம்!

ஜுன் மாதம் மூன்றாம் திகதியை அரச மொழி தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


ஜுன் 3ஆம் திகதியை அரச மொழி தினமாகவும், அத்தினத்திலிருந்து ஒரு வாரத்தை அரச மொழி வாரமாகவும் பிரகடனப்படுத்த வேண்டும் என அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் யோசனை முன்வைத்திருந்தார். அதற்கே நேற்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இத்தினத்தை பிரகடனப்படுத்துவதன் மூலம் அனைத்து சமூகங்களுக்குமான சமமான உரிமைகளை பாதுகாத்து முரண்பாடுகளை தீர்க்கவும், நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அரச மொழி கொள்கைக்கு அமைவாக சிங்கள மற்றும் தமிழ் மொழி முறையே அரச மற்றும் தேசிய மொழிகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.