மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்ட தற்காலிகத் தடை!

மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டும் திட்டத்துக்கு இராணுவ நிதியை பயன்படுத்துவதற்கு அமெரிக்க நீதிமன்றம் தற்காலிக தடைவிதித்துள்ளது.


அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக அகதிகள் வருகையை தடுக்கும் வகையில் மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீர்மானித்திருந்தார்.

அத்துடன், இதற்கான நிதியை ஒதுக்குமாறு அமெரிக்க நாடாளுமன்றத்திடம் அவர் கோரிக்கை வைத்தபோது, ஜனநாயக கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்காரணமாக மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டும் விவகாரத்தில் டிரம்ப், அவசர நிலையை பிரகடனம் செய்தார்.

இதன்மூலம் இராணுவ நிதியை மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவதற்காக அவர் பயன்படுத்த முடியும்.

இதற்கமைய எல்லை சுவர் திட்டத்துக்கு 1.5 பில்லியன் டொலரை நிதியாக ஒதுக்க அமெரிக்க இராணுவ தலைமையகம் அண்மையில் ஒப்புதல் வழங்கியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க சிவில் உரிமைகள் ஒன்றியம் சார்பில் 20 மாகாணங்களின் அமெரிக்க மத்திய நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தன.

இதில் கலிபோர்னியா மாநிலத்தின் மத்திய நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டும் திட்டத்துக்கு இராணுவ நிதியை பயன்படுத்துவதற்கு தற்காலிக தடை விதித்துள்ளார்.

இதன்காரணமாக ட்ரம்பின் குறித்த திட்டம் தற்போது தற்காலிகமாக கைவிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.