நுங்குத் திருவிழா

நாம் இயற்கையைப் பேணவே அதனைக் கொண்டாடுகிறோம். இயற்கையை யாரும் உரிமை கொள்ள முடியாதென்பதும் அதனுடன் நாம் கொள்ளும் வளப்பகிர்வு ஒப்பந்தமும் தான் முக்கியமானது. அது ஓர் ஆழ்ந்த விழிப்புணர்வுள்ள அரசியல் கொண்டாட்டம். நாம் விதைப்பது மரங்கள் என்பதோ குளிப்பது நுங்கு என்பதல்ல இங்கு முக்கியம், கனிவது என்ன என்பது தான் முக்கியம். அதுவே பண்பாடு. அது இயல்பானது. தானே தன்னை இயற்கையென்று உணர்ந்த அறிதலே மனிதர்கள் தாங்களே உருவாக்கிக்கொண்ட எல்லைகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும்.
விழிப்புள்ள கொண்டாட்டமே அரசியல்.
கருத்துகள் இல்லை