கிளிநொச்சியில் இராணுவ கைக்கூலி வாள் வெட்டில் கர்ப்பிணி உட்பட 9பேர் காயம்!📷🎥

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் சற்று முன் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் கர்ப்பிணி பெண் உட்பட ஆறு பெண்கள் மூன்று ஆண்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் காயம் அடைந்தனர்.இவர்கள் உடணடியாக வைத்திய சாலையில் அணுமதிக்கப்பட்டனர்.
கிளிநொச்சியில் செல்வாநகரில் இடம்பெற்ற வாள் வெட்டில் கர்ப்பிணி உட்பட ஒன்பது பேர் காயம்


கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் இன்று(29) மாலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களின் போது கர்ப்பிணி பெண் உட்பட ஒன்பது பேர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் வாள் வெட்டுச் சம்பவத்தின் போது ஒரு கர்ப்பிணி பெண் உட்பட ஆறு பெண்களும் மூன்று ஆண்களும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் தனியார் மற்றும் மூன்று நோயாளர் காவு வண்டிகளில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள் இரத்தத்தால் நனைந்து காணப்படுகிறது.

பட்டா ரக வாகனம் மற்றும் உந்துருளியில் சென்ற 15 க்கு மேற்பட்டவர்கள் வாள்களுடன் வீடு புகுந்து வாள் வெட்டில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு ஒரு உந்துருளி எரிக்கப்பட்டுள்ளதோடு, மற்றொரு உந்துருளி அடித்து சேதமாக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் உள்ளது. ஒரு தற்காலிக வீடு எரிக்கப்பட்டுள்ளது. இரண்டு வீடுகள் உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.