அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை முஸ்லிம் சிவில் அமைப்பு பிரதிநிதிகளுடன் மைத்திரி சந்திப்பு!!

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உள்ளிட்ட சுமார் 40 முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, பைசர் முஸ்தபா, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன மற்றும் அரச அதிகாரிகளும் பதிற் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உள்ளிட்ட பாதுகாப்புத்துறை பிரதானிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.