முஸ்லிம் தலைவர்களின் கருத்துக்கு செவிசாய்க்காமையே தற்போதைய நிலைக்கு காரணம் – வியாழேந்திரன்!!

நாடாளுமன்றில் கடந்த காலங்களில் முஸ்லிம் அரசியல்வாதிகள் வெளியிட்ட பாரதூரமான கருத்துக்களை விசாரணைக்கு உட்படுத்தியிருந்தால், நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த பாரிய அழிவை தடுத்திருக்கலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான வியாழேந்திரன் தெரிவித்தார்.


கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது இரத்த ஆறு ஓடும், முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்கள் போன்ற சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார். ஆனால் அந்த கருத்து தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை

எனினும் புலிகள் குறித்து கருத்து வெளியிட்ட விஜயகலா மகேஸ்வரனுக்கு தென்னிலங்கையில் பல எதிர்ப்புகள் வெளியிடப்பட்டதோடு, அவரை இராஜினாமா செய்ய வேண்டுமென பலர் வலியுறுத்தினர். எனினும் அதனைவிடவும் பாரதூரமான கருத்துக்களை வெளியிட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News #Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Vavuniya  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo #Viyalendiran

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.