நாடு திரும்புகின்றார் ஷாபாஸ் ஷெரீப்!

ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீப் லண்டனிலிருந்து மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.


இதற்கமைய அவர் நாளை (சனிக்கிழமை) பாகிஸ்தான் திரும்பவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஷாபாஸ் ஷெரீப் (வயது 67), ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஷாபாஸ் ஷெரீப் பஞ்சாப் மாகாண முதலமைச்சராக பதவி வகித்த போது ஊழலில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் இலஞ்ச ஒழிப்பு பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு லாகூரில் உள்ள தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஷாபாஸ் ஷெரீப் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை லாகூர் நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியது. இதையடுத்து, தனது பேரக்குழந்தைகளை பார்ப்பதற்காகவும், மருத்துவ பரிசோதனை செய்வதற்காகவும் கடந்த ஏப்ரல் 9-ம் திகதி லண்டன் சென்றார்.

வழக்கு விசாரணையின்போது, அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர். இதன்போது ஜூன் 11ம் திகதி ஷாபாஸ் ஷெரீப் நாடு திரும்புவார் என கூறியிருந்தனர்.

இந்நிலையில், ஷாபாஸ் ஷெரீப் நாளை நாடு திரும்பவுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.