முன்பள்ளி ஆசிரியர்களுக்கான செயலமர்வு!!

தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையினால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான என்.வி.கியூ தரம் நான்குக்கான (என் வி கியூ-4) சான்றிதழ்களை பெற்றுக் கொள்வோருக்கான பயிற்சி செயலமர்வு இடம்பெற்றுள்ளது.


குறித்த செயலமர்வு இன்று மட்டக்களப்பு மாவட்ட மஞ்சம் தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் மன்முனைப்பற்று, காத்தான்குடி, மன்முனைமேற்கு, மன்முனைவடக்கு, மன்முனைதெற்கு பிரதேசங்களைச் சேர்ந்த 200க்கு மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மேற்படி நிகழ்வில் தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் தலைவர் நஸீர் அஹமட், நைட்டா நிறுவனத்தின் பத்ம திவாகர (பணிப்பாளர்)), நிலந்த டீ சில்வா (பணிப்பாளர் பயிற்சி)), ஜனாப் சாஜஹான் (உதவிப் பணிப்பாளர் SIT) காணொளி ஊடாக கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அத்துடன் இந்நிகழ்வில் சுஜீவ விக்ரமசிங்க (உதவிப் பணிப்பாளர் ), மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி கல்வி பணியகத்தின் பணிப்பாளர் எஸ்.சசீகரன், மட்டகளப்பு மாவட்ட NAITA நிறுவனத்தின் முகாமையாளர் சலீம் மௌலானா கலந்து கொண்டிருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.