அப்துல் ராசிக் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜரானார்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழுவின் அமர்வு சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிப்பதற்காக சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் ராசிக் அங்கு ஆஜராகியுள்ளார்.

இதேவேளை தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் மற்றும் சாட்சியம் வழங்குவோர் தொடர்பிலான இரகசியத் தன்மையை பாதுகாப்பதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.