இந்தோனேசிய தொழிற்சாலையில் தீ விபத்து !

இந்தோனேசிய தொழிற்சாலையில் இடம்பெற்ற விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.


இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியிலுள்ள பின்ஜாய் மாவட்டத்துக்குட்பட்ட சம்பிரேஜோ என்ற கிராமத்தில் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலையில் இன்று வழமை போன்று தயாரிப்பு பணிகள் நடைபெற்றுவந்த நிலையில் திடீரென்று பயங்கரமான வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சிக்கி உடல் கருகி 30 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்து இடம்பெற்ற பகுதியில் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.