தண்ணீர் பிரச்னையால் தனியார் பள்ளிகளை மூடினால் கடும் நடவடிக்கை!

தண்ணீர் பற்றாக்குறையினால் தனியார் பள்ளிகளை மூடினாலோ, விடுமுறை அறிவித்தாலோ சம்மந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "தனியார் பள்ளிகளில் இருக்கும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்த பின்னரே பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இருந்த போதிலும் தற்போது கோடை காலத்தில் தண்ணீர் பிரச்னை நிலவுவதால், தனியார் பள்ளிகளில் அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யவேண்டும். அதையும் மீறி தண்ணீர் தட்டுப்பாட்டினால் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சுற்றறிக்கையின் மூலமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் எச்சரிக்கை

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.