காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை; தீவிரவாதி சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் போனியர் பகுதி அருகே தீவிரவாதிகள் நுழைந்ததாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் வந்ததையடுத்து, பாதுகாப்பு படையினர் இன்று காலையில் அப்பகுதிக்குச் சென்றனர். பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், அவனிடம் இடத்தில் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து தெற்கு காஷ்மீர் பகுதி முழுவதும் பதற்ற சூழ்நிலை காணப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.