4 குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்குத்தண்டனை – அதிரடி அறிவிப்பு!!

4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அமுல்படுத்தும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


தற்போது இடம்பெற்றுவரும் ஊடகப்பிரதானிகள் உடனான சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கான மரணதண்டனை நிறைவேற்றப்படும் திகதி முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மரண தண்டனையை நிறைவேற்றவுள்ளதாக ஜனாதிபதி இதற்கு முன்னர் அறிவித்தது முதல், பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் அதற்கு கடும் கண்டனம் வெளியிட்டு வருகின்றன.

அப்பாவிகள் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்ற காரணத்தை மையப்படுத்தியே பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் இவ்வாறு கண்டனம் வெளியிட்டு வருகின்றன.

இந்தநிலையிலேயே மரண தண்டனை குறித்த முக்கிய அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.