அவசரகால சட்டம் குறித்து ஜனாதிபதி விளக்கம்!!

பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தியாக உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


எனினும் சில விடயங்கள் காரணமாக தொடர்ந்தும் நாட்டில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான தேவையுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை தடுத்துவைத்து விசாரிக்க, இராணுவத்தினரை தூதரகங்களில் பாதுகாப்பில் ஈடுபடுத்த மற்றும் ஆடைகள் தொடர்பான கோட்பாடுகளை பேணுவதற்கு அவசரகாலச் சட்டம் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய அவசாரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.