தமிழ் மக்களுக்கு ஒரு நீதி இராணுவத்திற்க்கு ஒரு நீதி!!


கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் யாழ்.தேவி புகைரதம் மோதி இராணுவத்தினா் 6 போ் உயிாிழந்த சம்பவம் தொடா்பான தீவிர விசாரணைகளை பொலிஸாா் இன்று ஆரம்பித்திருப்பதுடன், வாக்குமூலங்களும் பெறப்படுகின்றது.


குறித்த விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அருகிலிருந்த பிரதேச மக்களின் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சம்பவத்தில் பலியான இராணுவத்தினரின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் இடம்பெற்றவுடன் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை, குறித்த விபத்து இடம்பெற்றபோது சமிக்ஞை விளக்குகள் மற்றும் ஒலி எழுப்பும் கருவி என்பன இயங்கியதா? இல்லையா?
என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.