தாஜுதீன் படுகொலை விவகாரத்தில் அநுரவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை!

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சாட்சியங்களை வேண்டுமென்றே மறைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆரச்சி முன்னிலையில் இன்று(வியாழக்கிழமை) குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அநுர சேனாநாயக்கவை 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் பிரதிவாதியின் கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைப்பதற்கும், நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதிவாதியின் விரல் அடையாளங்களைப் பெற்றுக் கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தவிட்டுள்ள நீதிபதி, வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 23ம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.