கட்டாரில் அதிநவீன போர் விமானங்களை நிறுத்தியது அமெரிக்கா!

அதிநவீன போர் விமானங்களை கட்டாரில் அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அமெரிக்க விமானப்படை தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘கட்டாரில் எங்களது அதிநவீன எஃப்-22 ரொப்டர் வகை போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படையினரின் பாதுகாப்புக்காகவும், அந்தப் பகுதியில் அமெரிக்க நலன்களைப் பேணவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவர் மீண்டும் அமுல்படுத்தினார்.

இதன்காரணமாக, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் தற்போது ரேடார் கண்களுக்குப் புலப்படாத அதி நவீன போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளமைப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.