பச்சிளம் குழந்தையை புதரில் வீசிச்சென்ற பெண்.!
கோவையில் பிறந்த பச்சிளம் குழந்தையை பெண் ஒருவர் புதரில் தூக்கி எறிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அன்னூரில் காட்டுப்பகுதியில் புதரில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் அக்குழந்தயை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குழந்தை இல்லாமல் எத்தனையோ பேர் ஆஸ்பத்திரிகளை நோக்கி லட்சங்களில் அலைந்து கொண்டிருக்க… அனாதையாய் ஒரு குழந்தை ஆஸ்பத்திரிக்கு போய் கொண்டிருந்தது. இந்த சம்பவம் பார்ப்போரை கண்ணீர் விட வைத்தது.
கருத்துகள் இல்லை