பிரபல இயக்குநருடன் இணைந்த ஹரிஷ் கல்யாண்!!

சசி இயக்கும் புதிய படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.


பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த ஹரிஷ் கல்யாண், அதனைத் தொடர்ந்து தன் போட்டியாளர் ரைசாவுடன் நடித்த பியார் பிரேமா காதல் சென்சேஷனல் ஹிட்டானது. சமீபத்தில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், அடுத்து இவர் நடித்துக் கொண்டிருக்கும் தனுசு ராசி நேயர்களே என காமெடி ஜானரில் உருவாகும் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கவிருக்கிறார். நிறுவனமான ஸ்ரீ கோகுலம் மூவிஸ் இப்படத்தினை தயாரிக்கிறது. ஜிப்ரான் இசையமைக்கிறார். மேலும் ஹரிஷ் கல்யாண், விக்கி டோனர் என்ற இந்தி படத்தின் ரீமேக்கான தாராள ராஜா என்ற படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில், வித்தியாசமான கதைக்களங்களுக்குப் பெயர்பெற்ற இயக்குநர் சசி இயக்கும் புதிய படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

சொல்லாமலே, ரோஜாக் கூட்டம், பூ, பிச்சைக்காரன் போன்ற படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் தனித்துவமாக வலம் வரும் இயக்குநர் சசி தற்போது சிவப்பு மஞ்சள் பச்சை என்ற படத்தை இயக்கி அதன் இறுதிக்கட்ட பணியில் இருக்கிறார். சித்தார்த்-ஜி.வி.பிரகாஷ் குமார் இணையும் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. இந்நிலையில், சசி இயக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.