வித்யா பிரதீப் புதிய படத்தில் வில்லி!!

தடம் படத்தில் கவனம் ஈர்த்த வித்யா பிரதீப் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் வில்லியாக நடிக்கவுள்ளார்.


சைவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குணசித்திர நடிகையாக அறிமுகமானவர் வித்யா பிரதீப். இப்படத்தில் இவரின் எதார்த்த நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. அதனை தொடர்ந்து பசங்க 2, அதிபர், அச்சமின்றி, களரி, இரவுக்கு ஆயிரம் கணகள், மாரி 2, தடம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் தடம் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்துள்ளது.

சசிகுமார் நடிக்கும் புதிய படத்தை மலையாள இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்குகிறார். இவர் இந்த படத்தில் உள்ள நெகட்டிவ் ரோல் ஒன்றில் நடிக்க நடிகையை தேடி வந்தார். இதனை அறிந்த அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் வித்யா பிரதீப்பை பரிந்துரை செய்துள்ளார். தடம் படத்தில் தனது கதாபாத்திரத்தை ரசிக்கும் படி மாற்றிய வித்யா பிரதீப்பின் நடிப்பை பார்த்து வியந்த ஒளிப்பதிவாளர் கோபிநாத், இப்படத்தின் நெகட்டிவ் ரோல் கதாபாத்திரத்தை செய்ய சரியான தேர்வாக அமைவார் என இயக்குநரிடம் பரிந்துரை செய்துள்ளார். இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமாரும் வித்யா பிரதீப்பின் திறமையை கண்டு வியந்து போக, சசிகுமாருக்கு வில்லியாக இப்படத்தில் தோன்றவுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.