ரயில் பயணிகளுக்கு மசாஜ் சேவை !!

விரைவில் இந்தியன் ரயில்வேயில் ஓடும் ரயில்களில் பயணிகளுக்கு மசாஜ் செய்யும் சேவை தொடங்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.


முதற்கட்டமாக, இந்தூரிலிருந்து புறப்பட்டுச் செல்லும் 39 ரயில்களில் இச்சேவை தொடங்கப்படுகிறது. இந்த ரயில்களில் பயணம் செய்யும்போது பயணிகளுக்கு மசாஜ் சேவை செய்யும் வகையில் பணியாட்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே வாரியத்தின் தகவல் தொடர்புப் பிரிவு இயக்குநரான ராஜேஷ் பஜ்பாய் செய்தியாளர்களிடையே தெரிவித்துள்ளார். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மசாஜ் சேவை வழங்குவது வரலாற்றிலேயே இதுவே முதன்முறை எனவும் அவர் கூறினார்.

இதுகுறித்து மேலும் அவர் பேசுகையில், “இன்னும் 20 நாட்களுக்குள் இந்த மசாஜ் சேவை தொடங்கப்பட்டுவிடும். மசாஜ் சேவைக்கு நபர் ஒன்றுக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும். இச்சேவை மூலமாக ரயில்வே துறையால் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரையில் லாபம் ஈட்ட முடியும். இதன்மூலம் ரூ.90 லட்சம் வரை கூடுதல் வருமானம் ரயில்வே துறைக்குக் கிடைக்கும்” என்றார். ரயில் பயணக் கட்டணம் தவிர்த்து இதர சேவைகள் வாயிலாக லாபம் ஈட்டும் முயற்சியில் ரயில்வே துறை இந்த மசாஜ் சேவையைத் தொடங்கவுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.