யார் மிருகம்?உலகை உலுக்கிய ஒற்றை புகைப்படம்!📷

போட்சுவானா நாட்டில், தந்தத்துக்காக யானையை கொடூரமாக கொன்ற போட்டோவை, ட்ரோன் ஒன்று படம்பிடிக்க, அது உலகையே உலுக்கியதுடன், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.



தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்சுவானாவில் வேட்டை தடைச் சட்டம் சமீபத்தில் நீக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவது அதிகரித்துள்ளது. இதுகுறித்து தனியார் நிறுவனத்துக்காக ஆவணப்படம் எடுக்க, ஐஸ்டின் சுலிவான் என்பவர், போட்சுவானா காட்டுபகுதியில் தனது ட்ரோனை பறக்க விட்டார்.

அப்போது இறந்து கிடந்த யானையின் சடலம் அவரது கண்ணில் பட்டது. யானையின் முகம் கொடூரமாக சிதைக்கப்பட்டு, ரம்பம் மூலம் துதிக்கை தனியாக துண்டிக்கப்பட்டு, தந்தம் வெட்டப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக அவரது ட்ரோன் கேமராவில் பதிவான இந்த காட்சிகள், தற்போது உலகையே உலுக்கி உள்ளது.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.