சஹ்ரானின் மகளை பாதுகாவலரிடம் ஒப்படைக்குமாறு CID கோரிக்கை!

தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் மகளை பொருத்தமான பாதுகாவலரிடம் ஒப்படைக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.


தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சஹ்ரானின் நான்கு வயது மகளை பொருத்தமான பாதுகாவலரிடம் ஒப்படைக்குமாறு அந்த பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், இந்த விடயம் தொடர்பாக சிறுவர் மற்றும் இளைஞர் கட்டளைகள் சட்டத்திற்கு அமைய எதிர்காலத்தில் பொருத்தமான உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை, சஹ்ரானின் மனைவி உட்பட மேலும் பலர் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதன்போது தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவரான சஹ்ரானும் உயிரிழந்திருந்தார்.

இதனையடுத்து சாய்ந்நதமருதில் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சமரில் சஹ்ரானின் உறவினர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.

எனினும் சஹ்ரானின் மனைவி மற்றும் மகளை காயங்களுக்கு உள்ளான நிலையில் இராணுவத்தினர் மீட்டிருந்தனர்.

அதன் பின்னர் பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த சஹ்ரானின் மனைவி சிகிச்சைகளின் பின்னர் குற்றப்புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

அத்தோடு, அவரின் மகளும் குற்றப்புலனாய்வு பிரிவினரின் பாதுகாப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.