இலங்கைப் பாராளுமன்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மாற்றம்!

அமைச்சரவைக் கூட்டங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


அதற்கமைய வழமையாக செவ்வாய்கிழமைகளில் காலை 9.30 மணியளவில் இடம்பெறும் அமைச்சரவைக் கூட்டம், எதிர்வரும் காலங்களில் காலை 7.30 மணிக்கு நடைபெறும் என அறிவித்துள்ளது.

இதேவேளை, இன்று நடைபெற்றுவரும் அமைச்சரவைக் கூட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவு தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்று முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழ் முற்போக்கு கூட்டணியின் அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் திகாம்பரம் ஆகியோருக்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.