பெண்கள் மேம்பாட்டில் முக்கியத்துவம்!

இந்தியாவின் முதல் (முழுநேர) பெண் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தனது முதல் பட்ஜெட் தாக்கலில் இன்று (ஜூலை 5), பெண்களின் மேம்பாட்டுக்காகப் பல்வேறு சிறப்பு அம்சங்களை வெளியிட்டார்.


நாட்டிலுள்ள பெண்களின் முன்னேற்றம் இல்லாமல் உலகின் எந்த நாடும் முன்னேற முடியாது என்று கூறிய நிர்மலா, பினவரும் அறிவிப்புகளைத் தனது பட்ஜெட் உரையில் வாசித்தார்.

சமூகப் பொருளாதார மேம்பாடு என்பது பெண்களின் பங்களிப்பால் மட்டுமே சாத்தியமாகும்.

இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில், முக்கியமாக ஊரகப் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு மிகப்பெரியது.

பெண்களின் பங்களிப்புக்கு ஆதரவளித்து ஊக்குவிக்க அரசு விரும்புகிறது. பாலின ஆய்வுகளை மேற்கொள்ளக் குழு ஒன்றை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.

நடந்துமுடிந்த தேர்தலில் ஏராளமான பெண் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் 78 நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் உள்ளனர்.

ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.5,000 மிகைப்பற்று (overdraft) அறிவிக்கப்படும்.

ஒவ்வொரு சுய உதவிக் குழுவிலும் ஒரு பெண்ணுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் சுய உதவிக் குழுக்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படும்.

தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் மகளிர் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.