வறுமையால் தொடருந்துடன் உயிரை மாய்க்க முயன்ற குடும்பம்!!

கடுமையான வறுமையால் உணவில்லாமல் தவித்த தாய் ஒருவா் தனது பெண் பிள்ளையுடன் ரயில் முன்னால் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற துயர சம்பவம் குருநாகல் கல்கமுவ பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.


கணவனால் கைவிடப்பட்ட 38 வயதான பெண்ணும் அவரது 10 வயது மகளுமே இவ்வாறு உயிரை மாய்க்க முயன்றனர். தண்டவாளத்துக்கு அருகில் கண்ணீருடன் நிற்றவர்களை அவதானித்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

கோட்டையில் இருந்து வவுனியா நோக்கி வருகை தந்து கொண்டிருந்த தொடருந்து முன் அவர்கள் பாய முயன்றுள்ளனர். அங்கு விரைந்த பொலிஸார் இருவரையும் காப்பாற்றியுள்ளனர். எந்தவித வருமானமும் இல்லாத நிலையில்,

வீதியில் சென்றவர்களிடம் உதவி கோரிய போதிலும் எவரும் உதவி செய்யவில்லை. வீட்டில் உடல் நிலை கோளாறுடன் வயோதிப தந்தை ஒருவரும் உள்ளார். பசிக்கொடுமையை தாங்கிக்கொள்ள முடியாமல் தான் இந்த முடிவை எடுத்ததாக பெண் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.