இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்!!

தனுஷ்கோடி அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி, மீன்கள், ஆவணங்கள்,
கருவிகளை எடுத்துச் சென்றதாக ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்கள் புகார் கூறியுள்ளனர்.கடந்த சனியன்று தனுஷ்கோடியிலிருந்து 60க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

அரிச்சல் முனை பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்படையினர் தங்களை தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்தியதோடு, படகில் இருந்த மீன்கள், கைகளில் அணிந்திருந்த கைக்கடிகாரங்கள், ஜிபிஎஸ் கருவிகள், படகின் ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் இலங்கை கடற்படையினர் எடுத்துச் சென்றுவிட்டதாக கரை திரும்பிய மீனவர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஒரு மாத காலமாகவே இலங்கைக் கடற்படையின் இதுபோன்ற அத்துமீறல் தொடர்வதாகக் கூறும் மீனவர்கள், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக கோரிக்கை விடுத்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.