சரத் - ராதிகா மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு!
காசோலை மோசடி வழக்கில் சிக்கிய சரத்குமார், ராதிகா சரத்குமார் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
திரைப்படம் தயாரிப்பதற்காகச் சென்னையைச் சேர்ந்த ரேடியன்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனமும் அதன் பங்குதாரர்கள் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ரூ.2 கோடிக்கு மேல் பணம் வாங்கி அதைத் திருப்பிச் செலுத்தவில்லை என்று புகாரளிக்கப்பட்டது. சைதாப்பேட்டை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கின் விசாரணையில் ஜூன் 28ஆம் தேதி ராதிகா சரத்குமார், சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஜோசப் ஆகிய மூவருக்கும் (ஜாமீனில் வெளிவரக்கூடிய) வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 12ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் சரத்குமார், ராதிகா சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஜோசெப் மேல்முறையீடு செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு மனு எண் 005358 - 005364 / 2019-இன் கீழ் ஜூன் 26ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு ஜூன் 27ஆம் தேதி பரிசீலிக்கப்பட்டது. இன்று (ஜூலை 5) நீதிபதிகள் சஞ்சய் கிசான் கவுல் மற்றும் கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு இந்த மனுவை நிராகரித்துள்ளது. சரத்குமார், ராதிகா சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஜோசப் சார்பாக வழக்குறைஞர் கே.கே.மணி ஆஜரானார். சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் மேல் முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
திரைப்படம் தயாரிப்பதற்காகச் சென்னையைச் சேர்ந்த ரேடியன்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனமும் அதன் பங்குதாரர்கள் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ரூ.2 கோடிக்கு மேல் பணம் வாங்கி அதைத் திருப்பிச் செலுத்தவில்லை என்று புகாரளிக்கப்பட்டது. சைதாப்பேட்டை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கின் விசாரணையில் ஜூன் 28ஆம் தேதி ராதிகா சரத்குமார், சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஜோசப் ஆகிய மூவருக்கும் (ஜாமீனில் வெளிவரக்கூடிய) வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 12ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் சரத்குமார், ராதிகா சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஜோசெப் மேல்முறையீடு செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு மனு எண் 005358 - 005364 / 2019-இன் கீழ் ஜூன் 26ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு ஜூன் 27ஆம் தேதி பரிசீலிக்கப்பட்டது. இன்று (ஜூலை 5) நீதிபதிகள் சஞ்சய் கிசான் கவுல் மற்றும் கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு இந்த மனுவை நிராகரித்துள்ளது. சரத்குமார், ராதிகா சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஜோசப் சார்பாக வழக்குறைஞர் கே.கே.மணி ஆஜரானார். சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் மேல் முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை