திறன்-கம்பங்கள் (Smart lamp Pole/Post) திறந்த கலந்துரையாடல் அழைப்பு!!

தற்போது வட மாகாணத்தை அச்சுறுத்துகின்றதோர் விடயமாக காணப்படுவதும், மக்களின் பேசுபொருளாக காணப்படுவதுமான திறன்-கம்பங்கள் (Smart lamp Pole/Post) தொடர்பாக கலந்துரையாலும் தொடர் நடவடிக்கைகளை ஆராய்தலுக்குமான பொதுக்கூட்டமொன்று நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை(14.07.2019) பிற்பகல்-03.00 மணிக்கு யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகாமையில் அமைந்துள்ள Y.M.C.A கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் இணையம் ஒழுங்கமைத்துள்ளதோடு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.