அமெரிக்கா தன்னார்வ ஆங்கில ஆசிரியர்களை இலங்கைக்கு அனுப்புகிறது!!

அமெரிக்க அரசு அடுத்த ஆண்டு முதல் 30 தன்னார்வ ஆங்கில ஆசிரியர்களை இலங்கைக்கு அனுப்பும் என எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் உடனான சந்திப்பின்போதே குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் இன்று (வியாழக்கிழமை) கூறியுள்ளார்.

அத்தோடு இந்த முயற்சி தொடர்பாக அமைச்சிற்கும் அமெரிக்க தூதரகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வரும் தன்னார்வ ஆசிரியர்கள் கிராமப்புற பாடசாலைகள் உள்ள மாணவர்களின் மொழியியல் அறிவை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஆங்கிலத்தை கற்பிக்க பயன்படுத்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.