மன்னாரில் மாதிரிக் கிராமங்கள் திறந்துவைப்பு!!

மன்னாரில் இரண்டு மாதிரிக் கிராமங்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் திறந்துவைக்கப்பட்டன.


மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட 239 ஆவது மாதிரிக் கிராமமான ஜோசப்வாஸ் நகர் மற்றும் 230 ஆவது மாதிரிக் கிராமமான ஜோசப் புரம் ஆகிய இரண்டு கிராமங்களும் இன்று (வியாழக்கிழமை) திறந்துவைக்கப்பட்டன.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன், சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் குறித்த கிராமங்களைத் திறந்துவைத்தனர்.

இந்நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் செயலாளர் றிப்கான் பதியுதீன், மன்னார் பிரதேச சபையின் தலைவர் எம்.முஜாகிர், ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஏ.எஸ்.எம்.பஸ்மி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.