தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இருவர் மாயம்!!

கடலில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக பமுனுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பமுனுகம, தல்தியவன்ன பகுதியைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

கடலில் படகு கவிழ்ந்ததில் குறித்த மீனவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

53 மற்றும் 58 வயதுயைட இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில் விபத்திற்குள்ளான படகிலிருந்த சில மீனவர்கள் காப்பற்றப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து மீனவர்கள் காணாமல் போனமை தொடர்பில் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.