ராஜஸ்தான் மாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன் சிங்!!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படவுள்ளார்.


காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் நீண்டகாலமாக மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில் அசாம் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவரின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்தது.

இந்நிலையில்  மன்மோகன் சிங், மீண்டும் அம்மாநிலத்தின் சார்பில் தேர்வு செய்யப்படுவதற்கு போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் இல்லை.

ஆகையால் வேறு மாநிலங்களில் இருந்து அவரை தேர்வு செய்ய ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க அமைச்சர் மதன்லால் அண்மையில் காலமானார். அங்கு தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதால் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

இதனால் மன்மோகன் சிங்கை, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.