இன்று மேற்கிந்திய தீவுகள் – இந்திய அணி மோதல்!!

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.


குயின்ஸ் பார்க் ஓவல், போர்ட் ஆஃப் ஸ்பெயின், டிரினிடாட் மைதானத்தில் ஆரம்பமாகும் இப்போட்டியில் இந்தியா அணிக்கு விராட் கோலியும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஜேசன் ஹோல்டரும் தலைமை தாங்கவுள்ளனர்.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டதனால் முடிவு எட்டப்படாத நிலையில் நிறைவடைந்தது.

இறைய போட்டியில் ஓய்வு பெறுவார் என எண்ணப்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணியின் சிரேஷ்ட அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல், லாராவின் சாதனையை முறியடிக்க சில ஓட்டங்களே தேவைப்படும் நிலையில் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

அந்தவகையில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக, கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன், சிம்ரான் ஹெட்மயர், ரோஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர், கார்லோஸ் பிராத்வைட், ஃபேபியன் ஆலன், ஷெல்டன் கோட்ரெல், கெமர் ரோச் ஆகியோர் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக கலீல் அஹமட்டை அணிக்குள் உள்வாங்குவதற்கு அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இருப்பினும், மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்தவகையில், ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், மொஹமட் ஷமி, கே கலீல் அஹமட் ஆகியோர் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.