கார்த்திக் சுப்புராஜ் படத்தில் கீர்த்தி!!
சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்குப் பின் கீர்த்தி சுரேஷ் தமிழில் நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கவுள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மேயாத மான் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மெர்குரி என்ற படத்தை தயாரித்து இயக்கவும் செய்தார். அதனைத் தொடர்ந்து தனது மூன்றாவது தயாரிப்பில் உருவாகும் படம் பற்றிய தகவலை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
இன்று கார்த்திக் சுப்புராஜ்.
இன்று கார்த்திக் சுப்புராஜ்.
சமீபத்தில் வெளியான 66ஆவது தேசிய திரைப்பட விழாவில் மகாநடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார் கீர்த்தி சுரேஷ். தமிழிலும் இப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. சென்றாண்டு வெளியான விஜய்யின் சர்கார் படத்திற்குப் பின் தமிழில் வேறு படத்தில் ஒப்பந்தமாகாமலிருந்த கீர்த்தி, கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் மூன்றாவது படத்தில் இணையவுள்ளார்.
இப்படத்தை அறிமுக இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கவுள்ளார். எமோஷனல்-மிஸ்டரி-திரில்லர் கலந்த திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் படத்திற்கு, அனில் க்ரிஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளார்.
ஸ்டோன் பென்ச் நிறுவனம் சார்பில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கவுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் துவங்கவுள்ளது. புரொடக்ஷன் நெ.3 என தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் தலைப்பு விரைவில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை