வடக்கு நோக்கி பயணித்த வாகனம் விபத்து!!

வவுனியா செட்டிக்குளம் ஆண்டியாபுளியாலங்குளம் பகுதியில் இன்று (25) காலை 7.40 மணியளவில் ஹயஸ் ரக வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


வத்தளை பகுதியிலிருந்து மடு நோக்கி பயணித்த வேன் ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் அருகேயிருந்த மின்கம்பத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் வேனில் பயணித்த 11 பேர் பயணித்த நிலையில் 9 பேர் படுகாயமடைந்து செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.