மீனவரின் வலையில் சிக்கிய மோட்டார் செல் குண்டுகள்!!

அம்பாறை – பொத்துவில் களப்புக்கட்டு பகுதியில் மீனவரின் வலையில் மோட்டார் செல் குண்டுகள் சிக்கியுள்ளன.


குறித்த பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவரின் வலையிலேயே குறித்த மோட்டார் குண்டுகள் சிக்கியுள்ளன .

இந்த விடயம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குண்டுகளை மீட்டுள்ளனர்.

மேலும் குறித்த 3 குண்டுகளும் கருப்பு நிற பொலித்தீன் பை ஒன்றில் சுற்றி கட்டப்பட்டிருத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம்  தொடர்பாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.