ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று (வியாழக்கிழமை) காலை உணரப்பட்டுள்ளது.


6.1 ரிக்டர் அளவில் ஹொக்கைடோவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 10 கி.மீ வரை உணரப்பட்டடுள்ளதுடன் சில கட்டடங்களும் இடிந்துள்ளன.

குறித்த நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை எதனையும் வெளியிடவில்லை. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்து உள்ளதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜப்பானில் கடந்த இரண்டு வாரமாக பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.