ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக நிர்மாணிக்கப்பட்ட நீச்சல் தடாகம் இன்று திறக்கப்படவுள்ளது!!
சர்வதேச தரத்தில் உலக சாதனை விளையாட்டு வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக நிர்மாணிக்கப்பட்ட வல்வெட்டித்துறை குமார் ஆனந்தன் நீச்சல் தடாகம் இன்று வெள்ளிக்கிழமை வல்வெட்டித்துறையில் ஶ்ரீலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் ஶ்ரீலங்காவின் தொலை தொடர்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம் .ஏ சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொள்வார்கள்.
சிறந்த திறமைகளை கொண்ட அமைதியான சூழலில் நல்லிணக்கத்திற்கு உயிரூட்டி விளையாட்டில் ஈடுபடும் கிராமிய விளையாட்டு வீரர்களுக்கு சாவதேச மட்டத்தில் விளையாட்டு வசதிகளை வழங்குவதனை நோக்கமாக கொண்டு இந்த நீச்சல் தடாகம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
‘ஆழிக்குமரன்’ என்றழைக்கப்படும் வீ.எஸ்.குமார் ஆனந்தன் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள வல்வெட்டித்துறையில் 1943.05.25 அன்று பிறந்தார். இளமைப்பருவத்திலிருந்தே அவர் கல்வி, விளையாட்டு இரண்டிலுமே திறமைசாலியாகத் திகழ்ந்தார்.
விசேட கடினமான விளையாட்டுக்கள் மற்றும் உடற்பயிற்சிகளின் மீதுள்ள அவருடைய ஈடுபாடு மற்றும் ஆர்வத்தின் காரணமாக அவரால் 7 கின்னஸ் உலகசாதனைகளையும் கின்னஸ் புத்தகத்தில் பதிவுசெய்யப்படாத 7 ஏனைய சாதனைகளையும் நிலைநாட்டக் கூடியதாகவிருந்தது.
1983 ஆம் ஆண்டுவரை அங்கீகரிக்கப்பட்டு கின்னஸ் உலகசாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 7 உலகசாதனைகளையும் அங்கீகரிக்கப்படாத 7 ஏனைய சாதனைகளையும் ஆனந்தன் நிலைநாட்டினார். 14 சாதனைகளில் நான்கு சாதனைகள் ஒரேநாளில் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
உலக சாதனைகளைக் கொண்ட கின்னஸ் புத்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஏழு சாதனைகள்
1. பாக்கு நீரிணையின் ஊடாக தலைமன்னாரிலிருந்து தென் இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் மீண்டும் அங்கிருந்து தலைமன்னாருக்கும் நீந்திய ஒரே நபர்: நேரம் 51 மணித்தியாலங்கள் 35 நிமிடங்கள் – 1975 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 18ம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் சித்திரை மாதம் 20ம் திகதி வரை. 40 மைல்கள்
2 .கொழும்பு விஹாரமாதேவி பூங்காவில் இடைவிடாது தொடர்ச்சியாக துவிச்சக்கர வண்டி ஓட்டியமை: நேரம் – 187 மணித்தியாலங்கள் 28 நிமிடங்கள் – ஓட்டிய தூரம் 1487 மைல்கள் – 1979ம் ஆண்டு வைகாசி மாதம் 2 ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் வைகாசி மாதம் 10ம் திகதி வரை.
3. கொழும்பு விஹாரமாதேவி பூங்காவில் பந்தைக் குத்துதலில் ஈடுபட்டமை 136 மணித்தியாலங்கள் 28 நிமிடங்கள் 1979ம் ஆண்டு மார்கழி மாதம் 26ம் திகதி புதன்கிழமை தொடக்கம் 1980ம் ஆண்டு தைமாதம் 1ம் திகதி செவ்வாய்க்கிழமை வரை.
4. கொழும்பு வை.எம்.சி.ஏ மண்டபத்தில் உட்கார்ந்து எழுதல் . 2 நிமிடங்களில் 165 தடவைகள். 1980 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 15ம் திகதி வியாழக்கிழமை
5. கொழும்பு வை.எம்.சி.ஏ மண்டபத்தில் தொடர்ச்சியாக ஒற்றைக் காலில் சம நிலையில் நின்றமை 33 மணித்தியாலங்கள் 1980 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 15 ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் வைகாசி மாதம் 17 ஆம் திகதி வரை.
6.கொழும்பு காலி முகத்திடலில் காலை உயர்த்தி உயர் உதைத்தலில் ஈடுபட்டமை 6 மணித்தியாலங்கள் 51 நிமிடங்களில் 9100 உதைகள், 1980 ஆம் ஆண்டு மார்கழி மதம் 31ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் 1981 ஆம் ஆண்டு தைமாதம் 1 ஆம் திகதி வியாழக்கிழமை வரை.
7. தென் இந்தியாவில் சென்னையில் அமைந்துள்ள அண்ணா நீச்சல் தடாகத்தில் கைகளால், கால்களால் தவளை போல் நீரை உதைத்துக் கொண்டிருந்தமை. 80 மணித்தியாலங்கள் 33 வினாடிகள் 1981 ஆம் ஆண்டு ஆடி மாதம் 27 ஆம் திகதி திங்கட் கிழமை தொடக்கம் 1981ம் ஆண்டு ஆவணி மாதம் 1 ஆம் திகதி சனிக்கிழமை வரை.
கின்னஸ் உலக சாதனைகளாக ஏற்றுக் கொள்ளப்படாத ஏனைய குறிப்பிடத்தக்க சாதனைகள்.
1. வல்வெட்டித்துறையில் இருந்து இந்தியாவில் உள்ள கோடிக் கரைக்கு பாக்கு நீரிணையில் நீந்தியமை 42 மணித்தியாலங்கள் 1963 ஆம் ஆண்டு பங்குனிமாதம் 20 ஆம் திகதி புதன் கிழமை தொடக்கம் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை- 30 மைல்கள்.
2.கொழும்பு காலி முகத்திடலில் நிறுத்தாமல் ‘ருவிஸ்ற்’ நடனமாடியமை 128 மணித்தியாலங்கள் 16 நிமிடங்கள் 1978 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 27 ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் 1979 ஆம் ஆண்டு தைமாதம் 2 ஆம் திகதி செவ்வாயக்கிழமை வரை
3. கொழும்பு வை.எம்.சி.ஏ மண்டபத்தில் தமது உடல் எடைக்குச் சமனான 130 இறாத்தல் எடையுள்ள இரும்பு வட்டங்களைத் தூக்கிக் கொண்டு வேகமாக குந்தி எழும்பியமை 4 நிமிடங்கள் 24 வினாடிகளில் 195 தடைவைகள் 1980 ஆம் ஆண்டு வைகாசிமாதம் 15ஆம் திகதி வியாழக்கிழமை.
4. கொழும்பு வை.எம்.சி.ஏ மண்டபத்தில் தமது உடல் எடைக்குச் சமனான 130 இறாத்தல் எடையுள்ள இரும்பு வட்டங்களைத் தூக்கிக் கொண்டு ஒற்றைக்காலில் சமநிலையில் நின்றமை 6 நிமிடங்கள் 1980ம் ஆண்டு வைகாசி மாதம் 15 ஆம் திகதி வியாழக்கிழமை.
5. கொழும்பு வை.எம்.சி.ஏ மண்டபத்தில் 5 சுருள்கள் கொண்ட 80 இறாத்தில் நிறையுடைய மார்பு விரிவாக்கியை இழுத்தலில் ஈடுபட்டமை 39 தடவைகள் 59 வினாடிகளில் 1980ம் ஆண்டு வைகாசி மாதம் 15 ஆம் திகதி வியாழக்கிழமை.
6. தென் இந்தியாவில் உள்ள சென்னையில் நிற்காமல் தொடர்ச்சியாக நடத்தலில் ஈடுபட்டமை 149 மணித்தியாலங்கள் 296 மைல்கள் 1981ம் ஆண்டு ஆவணி மாதம் 1 ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் ஆவணி மாதம் 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை.
7. யாழ்ப்பாணம் திறந்த வெளி அரங்கில் 22 அவுன்ஸ் எடையுள்ள பிலியட்ஸ் தடியை ஒரு கையினால் மேலும் கீழுமாக உயர்த்தியமை 2250 தடவைகள்; 3 மணித்தியாலங்கள் 59 நிமிடங்கள் 1982 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் 1983ம் ஆண்டு தை மாதம் 1ஆம் திகதி வரை.
1980ம் ஆண்டு வைகாசி மாதம் 15ம் திகதி வியாழக்கிழமை நான்கு சாதனைகளும் 5 மணித்தியாலங்களில் நிறைவேற்றப்பட்டன.ஈடிணையற்ற உலக சாதனைகளை நிலைநாட்டிய ‘ஆழிக்குமரன்’ ஆனந்தன் அவ்வாறான மேலதிக சாதனைகளில் பேராவல் கொண்டிருந்ததுடன் ஆங்கிலக் கால்வாயை (இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் இடையில்) நீந்திக் கடக்க முயற்சித்தபோது கடுங் குளிரான நீரில் சிக்குண்டு 1984.08.06 ஆம் திகதியன்று உயிரிழந்தார்
கின்னஸ் சாதனை வீரர் ஆழிக்குமரன் ஆனந்தனின் நினைவாக வல்வெட்டித்துறையில் நிர்மாணிக்கப்பட்ட குமார் ஆனந்தன் நீச்சல் தடாகம் அமைச்சர் மங்கள சமரவீரவினால் திறந்து வைக்கப்படுகிறது!
இந்நிகழ்வில் ஶ்ரீலங்காவின் தொலை தொடர்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம் .ஏ சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொள்வார்கள்.
சிறந்த திறமைகளை கொண்ட அமைதியான சூழலில் நல்லிணக்கத்திற்கு உயிரூட்டி விளையாட்டில் ஈடுபடும் கிராமிய விளையாட்டு வீரர்களுக்கு சாவதேச மட்டத்தில் விளையாட்டு வசதிகளை வழங்குவதனை நோக்கமாக கொண்டு இந்த நீச்சல் தடாகம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
‘ஆழிக்குமரன்’ என்றழைக்கப்படும் வீ.எஸ்.குமார் ஆனந்தன் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள வல்வெட்டித்துறையில் 1943.05.25 அன்று பிறந்தார். இளமைப்பருவத்திலிருந்தே அவர் கல்வி, விளையாட்டு இரண்டிலுமே திறமைசாலியாகத் திகழ்ந்தார்.
விசேட கடினமான விளையாட்டுக்கள் மற்றும் உடற்பயிற்சிகளின் மீதுள்ள அவருடைய ஈடுபாடு மற்றும் ஆர்வத்தின் காரணமாக அவரால் 7 கின்னஸ் உலகசாதனைகளையும் கின்னஸ் புத்தகத்தில் பதிவுசெய்யப்படாத 7 ஏனைய சாதனைகளையும் நிலைநாட்டக் கூடியதாகவிருந்தது.
1983 ஆம் ஆண்டுவரை அங்கீகரிக்கப்பட்டு கின்னஸ் உலகசாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 7 உலகசாதனைகளையும் அங்கீகரிக்கப்படாத 7 ஏனைய சாதனைகளையும் ஆனந்தன் நிலைநாட்டினார். 14 சாதனைகளில் நான்கு சாதனைகள் ஒரேநாளில் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
உலக சாதனைகளைக் கொண்ட கின்னஸ் புத்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஏழு சாதனைகள்
1. பாக்கு நீரிணையின் ஊடாக தலைமன்னாரிலிருந்து தென் இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் மீண்டும் அங்கிருந்து தலைமன்னாருக்கும் நீந்திய ஒரே நபர்: நேரம் 51 மணித்தியாலங்கள் 35 நிமிடங்கள் – 1975 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 18ம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் சித்திரை மாதம் 20ம் திகதி வரை. 40 மைல்கள்
2 .கொழும்பு விஹாரமாதேவி பூங்காவில் இடைவிடாது தொடர்ச்சியாக துவிச்சக்கர வண்டி ஓட்டியமை: நேரம் – 187 மணித்தியாலங்கள் 28 நிமிடங்கள் – ஓட்டிய தூரம் 1487 மைல்கள் – 1979ம் ஆண்டு வைகாசி மாதம் 2 ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் வைகாசி மாதம் 10ம் திகதி வரை.
3. கொழும்பு விஹாரமாதேவி பூங்காவில் பந்தைக் குத்துதலில் ஈடுபட்டமை 136 மணித்தியாலங்கள் 28 நிமிடங்கள் 1979ம் ஆண்டு மார்கழி மாதம் 26ம் திகதி புதன்கிழமை தொடக்கம் 1980ம் ஆண்டு தைமாதம் 1ம் திகதி செவ்வாய்க்கிழமை வரை.
4. கொழும்பு வை.எம்.சி.ஏ மண்டபத்தில் உட்கார்ந்து எழுதல் . 2 நிமிடங்களில் 165 தடவைகள். 1980 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 15ம் திகதி வியாழக்கிழமை
5. கொழும்பு வை.எம்.சி.ஏ மண்டபத்தில் தொடர்ச்சியாக ஒற்றைக் காலில் சம நிலையில் நின்றமை 33 மணித்தியாலங்கள் 1980 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 15 ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் வைகாசி மாதம் 17 ஆம் திகதி வரை.
6.கொழும்பு காலி முகத்திடலில் காலை உயர்த்தி உயர் உதைத்தலில் ஈடுபட்டமை 6 மணித்தியாலங்கள் 51 நிமிடங்களில் 9100 உதைகள், 1980 ஆம் ஆண்டு மார்கழி மதம் 31ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் 1981 ஆம் ஆண்டு தைமாதம் 1 ஆம் திகதி வியாழக்கிழமை வரை.
7. தென் இந்தியாவில் சென்னையில் அமைந்துள்ள அண்ணா நீச்சல் தடாகத்தில் கைகளால், கால்களால் தவளை போல் நீரை உதைத்துக் கொண்டிருந்தமை. 80 மணித்தியாலங்கள் 33 வினாடிகள் 1981 ஆம் ஆண்டு ஆடி மாதம் 27 ஆம் திகதி திங்கட் கிழமை தொடக்கம் 1981ம் ஆண்டு ஆவணி மாதம் 1 ஆம் திகதி சனிக்கிழமை வரை.
கின்னஸ் உலக சாதனைகளாக ஏற்றுக் கொள்ளப்படாத ஏனைய குறிப்பிடத்தக்க சாதனைகள்.
1. வல்வெட்டித்துறையில் இருந்து இந்தியாவில் உள்ள கோடிக் கரைக்கு பாக்கு நீரிணையில் நீந்தியமை 42 மணித்தியாலங்கள் 1963 ஆம் ஆண்டு பங்குனிமாதம் 20 ஆம் திகதி புதன் கிழமை தொடக்கம் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை- 30 மைல்கள்.
2.கொழும்பு காலி முகத்திடலில் நிறுத்தாமல் ‘ருவிஸ்ற்’ நடனமாடியமை 128 மணித்தியாலங்கள் 16 நிமிடங்கள் 1978 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 27 ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் 1979 ஆம் ஆண்டு தைமாதம் 2 ஆம் திகதி செவ்வாயக்கிழமை வரை
3. கொழும்பு வை.எம்.சி.ஏ மண்டபத்தில் தமது உடல் எடைக்குச் சமனான 130 இறாத்தல் எடையுள்ள இரும்பு வட்டங்களைத் தூக்கிக் கொண்டு வேகமாக குந்தி எழும்பியமை 4 நிமிடங்கள் 24 வினாடிகளில் 195 தடைவைகள் 1980 ஆம் ஆண்டு வைகாசிமாதம் 15ஆம் திகதி வியாழக்கிழமை.
4. கொழும்பு வை.எம்.சி.ஏ மண்டபத்தில் தமது உடல் எடைக்குச் சமனான 130 இறாத்தல் எடையுள்ள இரும்பு வட்டங்களைத் தூக்கிக் கொண்டு ஒற்றைக்காலில் சமநிலையில் நின்றமை 6 நிமிடங்கள் 1980ம் ஆண்டு வைகாசி மாதம் 15 ஆம் திகதி வியாழக்கிழமை.
5. கொழும்பு வை.எம்.சி.ஏ மண்டபத்தில் 5 சுருள்கள் கொண்ட 80 இறாத்தில் நிறையுடைய மார்பு விரிவாக்கியை இழுத்தலில் ஈடுபட்டமை 39 தடவைகள் 59 வினாடிகளில் 1980ம் ஆண்டு வைகாசி மாதம் 15 ஆம் திகதி வியாழக்கிழமை.
6. தென் இந்தியாவில் உள்ள சென்னையில் நிற்காமல் தொடர்ச்சியாக நடத்தலில் ஈடுபட்டமை 149 மணித்தியாலங்கள் 296 மைல்கள் 1981ம் ஆண்டு ஆவணி மாதம் 1 ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் ஆவணி மாதம் 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை.
7. யாழ்ப்பாணம் திறந்த வெளி அரங்கில் 22 அவுன்ஸ் எடையுள்ள பிலியட்ஸ் தடியை ஒரு கையினால் மேலும் கீழுமாக உயர்த்தியமை 2250 தடவைகள்; 3 மணித்தியாலங்கள் 59 நிமிடங்கள் 1982 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் 1983ம் ஆண்டு தை மாதம் 1ஆம் திகதி வரை.
1980ம் ஆண்டு வைகாசி மாதம் 15ம் திகதி வியாழக்கிழமை நான்கு சாதனைகளும் 5 மணித்தியாலங்களில் நிறைவேற்றப்பட்டன.ஈடிணையற்ற உலக சாதனைகளை நிலைநாட்டிய ‘ஆழிக்குமரன்’ ஆனந்தன் அவ்வாறான மேலதிக சாதனைகளில் பேராவல் கொண்டிருந்ததுடன் ஆங்கிலக் கால்வாயை (இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் இடையில்) நீந்திக் கடக்க முயற்சித்தபோது கடுங் குளிரான நீரில் சிக்குண்டு 1984.08.06 ஆம் திகதியன்று உயிரிழந்தார்
கின்னஸ் சாதனை வீரர் ஆழிக்குமரன் ஆனந்தனின் நினைவாக வல்வெட்டித்துறையில் நிர்மாணிக்கப்பட்ட குமார் ஆனந்தன் நீச்சல் தடாகம் அமைச்சர் மங்கள சமரவீரவினால் திறந்து வைக்கப்படுகிறது!
கருத்துகள் இல்லை