கஷ்மீரில் கிரிக்கெட் பயிற்சி பட்டறை-டோனி.!!

ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியிலுள்ள கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் டோனி, அங்கு கிரிக்கெட் பயிற்சி பட்டறை ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் டோனி, துணை இராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய விளையாட்டிலிருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக அண்மையில் அறிவித்திருந்தார்.



இதனால் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை. பிராந்திய இராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் லெப்டினன்ட் கேர்னல் ஆகவுள்ள டோனி, எதிர்வரும் 31ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 15ஆம் திகதி வரை காஷ்மீரில் இராணுவ குழுவினருடன் ரோந்து பணிக்கு செல்ல இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதற்கமைவாகவே டோனி காஷ்மீரில் வீரர்களுடன் இராணுவ ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்.


 இந்நிலையில் ஜம்மு காஷ்மீரிலுள்ள இளைஞர்களை ஊக்குவிக்க அங்கு கிரிக்கெட் பயிற்சி பட்டறை ஒன்றை தொடங்க டோனி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பயிற்சி பட்டறையில் அங்குள்ள இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வழங்க டோனி தீர்மானித்துள்ளதாகவும் மத்திய விளையாட்டுத்துறையுடன் அவர் கலந்தாலோசித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.