அவசரத்தில் நேர்ந்த ஆபத்து- ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி, முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.


இந்த விபத்து சம்பவம் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் டிப்பர் வாகனத்தில் ஏறி சாரதியுடன் சினேகபூர்வமாக பேசி இறங்கும் சந்தர்ப்பத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் சாரதியுடன் பேசிவிட்டு இறங்குகின்ற சந்தர்ப்பத்தில் சாரதி வாகனத்தை செலுத்தியுள்ளார்.

இதன்போது தவறி விழுந்த அவர், சில்லுள் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவருகிறது.

விபத்தில் முரசுமோட்டடை, ஐயன் கோவிலடி பகுதியைச் சேர்ந்த அல்வின் அனுரா என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிப்பர் வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்றமை தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.