பிரதமர் ரணில் யாழ். பேருந்து நிலையத்தை பார்வையிட்டார்!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அங்கு புதிதாக அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை பார்வையிட்டுள்ளார்.


பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக் கொள்வதற்காக இன்று (சனிக்கிழமை) யாழிற்கு சென்றுள்ள பிரதமர் ரணில், இந்நிகழ்வுகளின் முதற்கட்டமாக யாழ். மாநகர சபையால் நகர மத்தியில் அமைக்கப்படவுள்ள பேருந்து நிலையத்தை சென்று பார்வையிட்டார்.

இதன்போது, நகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,  மாநகர முதல்வர் உள்ளிட்ட பலரும் பிரதமருடன் பார்வையிட்டனர்.

இதன்போது, அமைப்பாளர்கள் நிழல் வரைப்படத்தை கொண்டு குறித்த பேருந்து நிலையத்தின் கட்டமைப்பு குறித்து பிரதமருக்கு தெளிவுப்படுத்தினர்.

யாழ்ப்பணத்தில் என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கண்காட்சி நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் , இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.