சுகாதார தொண்டர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!!

சுகாதார தொண்டர்களாக கடமையாற்றிய 35 பேருக்கான நிரந்தர நியமனம் கோரி கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


சுமார் 10 வருடங்களாக தொணடர்களாக கடமையாற்றி இது வரை காலமும் நியமனம் வழங்கப்படவில்லை எனவும், அரசியல் தலையீட்டினால் அரசியல் வாதிகளுக்கு சார்பான ஆதரவாளர்களுக்கு நியமனம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதன் போது ஆளுநரை சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்து பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும், ஆளுநர் ஐந்து நாள் அவகாசம் கேட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் இதற்கான முடிவு வழங்காவிட்டால் ஆர்பாட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.